April 30, 2024

13 வ து தி ருமண நா ளை..!! வித் தியாச மாக கொ ண் டாடிய சிவ கார் த்திகே யன் ..!! இணை யத் தை கலக் கும் புகை ப்ப டம் ..!! வாழ் த்து மழை யி ல் ர சிகர் க ள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் நடிகர் ,தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியிருந்த சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.  இதனாலேயே இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து விடுகிறது.  அப்படி சமீபத்தில்,

இவரின் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன் . இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன்.  திருமணமான இ வர்களுக்கு ஒரு மகள் ,

ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 13 வது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கல்யாண நாளில் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வரும் சிவகார்த்திகேயன் இந்த முறை புகைப்படத்தை பகிர்ந்தது ,

மட்டுமல்லாமல் ” என் சந்தோஷக் கண்ணீரே ” என்ற கேப்சன் உடன் பதிவிட்டுள்ளார் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *