April 29, 2024

நானும் சரக்கு அடிப்பேன் ..!! ஓப்பனாக சொல்லிய சூர்யா பட நடிகை ..!! இந்த நடிகையா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!

பூமிகா சாவ்லா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூமிகா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம்தான் .

இந்த படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் தமிழ் ரசிகர்களையும்  கவர்ந்திருந்தார் நடிகை பூமிகா. பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து ரோஜாக் கூட்டம்,  சித்திரையில் நிலா சோறு , களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம்,

கண்ணை நம்பாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை பூமிகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி ,பஞ்சாபி மற்றும் போஜ்புரி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை  பூமிகா. திருமணமான இவர்களுக்கு  ஒரு மகனும்  இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  நடிகை பூமிகாவிடம் உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் ,

இருக்கிறதா .? ஒரு முறையாவது அதை செய்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர் . அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் பூமிக்கு எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று பதிலளித்திருக்கிறார் நடிகை பூமிகா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *