தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. மூத்த நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது ஜோதிகாவுடன் இணைந்து,
பூவெல்லாம் கேட்டுப்பார் ,உயிரிலே கலந்தது ,பேரழகன், மாயாவி, காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் பல படங்களில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவும் , ஜோதிகாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ,
திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . கிட்டத்தட்ட திருமணமாகி 17 வருடங்கள் ஆகியும் கூட இருவருக்கும் அந்தக் காதல் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு மனைவி ஜோதிகாவுக்கு ,
அன்பை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என்று காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி” என்று பதிவு போட்டுள்ளார் ,
நடிகர் சூர்யா . இப்படி சூர்யா மனைவிக்கும் சரி , சக நடிகர்களுக்கும் சரி அவ்வளவு மரியாதை கொடுப்பதால் தான் ரசிகர்கள் இன்னும் இவரை கொண்டாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது …