April 28, 2024

கணவன் மனைவினா இப்படி இருக்கணும் ..!! திடீரென ஜோதிகாவுக்கு நன்றி சொல்லிய சூர்யா ..!! காரணத்தை கேட்டு அசந்து போன ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. மூத்த நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது ஜோதிகாவுடன் இணைந்து,

பூவெல்லாம் கேட்டுப்பார் ,உயிரிலே கலந்தது ,பேரழகன், மாயாவி, காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் பல படங்களில் நடித்திருந்தார்.  அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவும் , ஜோதிகாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ,

திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . கிட்டத்தட்ட திருமணமாகி 17 வருடங்கள் ஆகியும் கூட இருவருக்கும் அந்தக் காதல் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு மனைவி ஜோதிகாவுக்கு ,

அன்பை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என்று காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி” என்று பதிவு போட்டுள்ளார் ,

நடிகர் சூர்யா . இப்படி சூர்யா மனைவிக்கும் சரி , சக நடிகர்களுக்கும் சரி அவ்வளவு மரியாதை கொடுப்பதால் தான் ரசிகர்கள் இன்னும் இவரை கொண்டாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *