சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகர்கள் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வருவார்கள் . அப்படி எம்ஜிஆர் -சிவாஜி, ரஜினி -கமலை தொடர்ந்து வந்தவர்கள் தான் விஜய் -அஜித். ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது . இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் .இந் நிலையில்,
நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்குவதற்காக தீயாக வேலை செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத் தொகையும், பரிசுகளும் வழங்கியிருந்தார் .
இதனால் தமிழ் மக்களின் ஆதரவு விஜய்க்கு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தும் அரசிய லுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே வெளியில் தலை காட்டுவதை தவிர்த்து வருகிறார் நடிகர் அஜித்.
குறிப்பாக அவருடைய புகைப்படங்கள் கூட வெளியாகாமல் இருந்து வந்தது . ஆனால் சமீப காலமாக ஒரு நாளைக்கு ஒரு புகைப்படமாவது வெளியாகி விடுகிறது . அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் அஜித்தை பார்த்துவிட்டு சென்றார்.இவரை தொடர்ந்து,
அரசியல்வாதி போல இருக்கும் இரண்டு நபர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்திருக்கிறார் . இதுதான் தற்போது ரசிகர்களிடையே பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் பலரும் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் அரசியலுக்கு வர போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…