தமன்னா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா தொடர்ந்து வியாபாரி ,கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா ,சிறுத்தை, வேங்கை என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் .
அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை தமன்னா பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை தமன்னா . பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது அவரை பவுசர்கள்,
பாதுகாத்து அழைத்து வந்தனர் . அப்போது நடிகை தமன்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்து தமன்னாவின் கையை பிடித்தார். உடனே பவுன்சர்கள் அவரை அடித்து விரட்டினார்கள். பின்னர் அந்த இளைஞர் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்லியதும்,
நடிகை தமன்னா அவரை எதுவும் செய்யாதீர்கள் என்று சொல்லி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் . அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா என்று கூறி வருகின்றனர்…
One more reason to admire her even more.. The way she handles the situation.. @tamannaahspeaks ❤ Thangam sir En thalaivi Tammu🥰🥰 pic.twitter.com/wt1rIvY0aJ
— Vinith❤Tammy (@ViniSayz) August 6, 2023