இப்போது நடிக்கவில்லை என்றாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அவர் நன்றாக இருந்தவரை மக்கள் நலனுக்காகவே போராடினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படிபட்ட தங்கமான மனிதர் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்கள் பலரும் அவருக்காக வேண்டினார்கள் . அந்த அளவிற்கு ரசிகர்களின் ,
மனதில் இடம்பிடித்து இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் எனக்கு ஒரு அம்மா மாதிரி என்று உருக்கமாக கூறியிருந்தார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகர் எம் எஸ் பாஸ்கர் தான் .
அந்த வகையில் கேப்டனும் , எம் எஸ் பாஸ்கரும் இணைந்து கஜேந்திரா, நெறஞ்ச மனசு ,பேரரசு ,தர்மபுரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போது ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எம் எஸ் பாஸ்கர் மரத்தடியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாராம் .
அதை விஜயகாந்த் பார்த்துக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல் எம்.எஸ். பாஸ்கர் உறங்குவதை அனைவரிடமும் ரசித்து கூறினாராம் . சில பேர் எழுப்ப போனபோது அவரை எழுப்ப வேண்டாம் , நன்றாக சாப்பிட்டு அசதியில் தூங்குகிறார், ஷாட் வரும் போது மட்டும் போய் எழுப்புங்கள்,
என்று கூறினாராம் . அந்த அளவிற்கு ஒரு தாய் தன்னுடைய மகனை ரசிப்பது போல விஜயகாந்த் என்னையும் ரசித்தார் என்று உருக்கமாக கூறியிருந்தார் நடிகர் எம் எஸ் பாஸ்கர் …