தமிழ் சினிமா உலகில் இயக்குனர் தயாரிப்பாளர் என்று கலக்கிக் கொண்டு வந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் ,நண்பேண்டா ,கெத்து, மனிதன் ,நெஞ்சுக்கு நீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் மாமன்னன் படத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட உதயநிதி,
தற்போது அரசியலில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் யாருக்கும் அடங்காத இயக்குனர் உதயநிதிக்கு மட்டும் பயப்படுவாராம். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் மிஷ்கின் தான் . சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக,
அறிமுகமானார் மிஷ்கின். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா ,யுத்தம் செய் , பிசாசு போன்ற பல தரமான திரைப்ப டங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் மிஷ்கின் . ஆனால் சமீப காலமாக மேடை நாகரீகம் தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசி சர்ச்சையை ,
கிளப்பிக் கொண்டு இயக்குனர் மிஷ்கின். அதுவும் இந்த விஷயத்தில் பெரிய நடிகர் சின்ன நடிகர் என்று எதுவும் பார்ப்பதில்லை. இப்படி யாருக்கும் அடங்காத இயக்குனர் மிஷ்கின் உதயநிதி என்றால் மட்டும் கொஞ்சம் பயப்படுவாராம் . அதற்கு காரணம் உதயநிதியை,
பகைத்துக் கொண்டால் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவோம் என்ற பயம் இயக்குனர் மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனாலேயே எந்த இடத்திலும் உதயநிதியை பற்றி எதுவும் பேசாமல் இருந்து வருகிறாராம் இயக்குனர் மிஷ்கின்…