தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்படி ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான எந்த திரைப்படங்களும் கை கொடுக்கவில்லை . இதனால் ஜெயிலர் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்து 80 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது .
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதோடு இதற்கு முன்பு வசூலில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் , விக்ரம் போன்ற படங்களை,
பின்னுக்கு தள்ளியுள்ளது ஜெயிலர் திரைப்படம் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் , அஜித் போன்ற நடிகர்களே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் ரஜினி வெறும் 80 கோடி தான் சம்பளம் வாங்குகிறாரா என்று பலரும் கூறி வந்தனர் . ஆனால் சம்பள விஷயத்தில் சூப்பர் ஸ்டார் எப்போதும்,
கெட்டிக்காரராம். அந்த வகையில் ஜெயிலர் படம் ஆரம்பிக்கும் போதே இந்த படம் வெற்றி பெற்றால் அதில் லாபத்தில் எனக்கும் பங்கு வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம் . அப்படி இந்தத் திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 500 கோடியை எட்டியுள்ளது . இதனால் அந்த லாபத்தில் 200 கோடி ,
சம்பளமாக கேட்டுள்ளாராம் ரஜினிகாந்த். குறிப்பாக பல வருடமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதே யுத்தியை தான் கையாண்டு வருகிறாராம் . இதைப் பார்த்த ரசிகர்கள் பணத்தாசை யாரை விட்டது என்று கூறி வருகின்றனர்…