தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . அமராவதி என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அஜித் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும்,
விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் அண்மைக்காலமாக அஜித் பைக் டூர் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் கல்யாணமான புதிதில் இனிமேல் பைக்கையே தொடக்கூடாது என்று அஜித்திற்கு கண்டிஷன்,
போட்டாராம் ஷாலினி . அதற்கான காரணம் என்னவென்றால் , அப்போது அஜித் பைக் ரேஸில் கலந்துகொண்டபோது மிகப்பெரிய விபத்துக்கு ஆளானார் . இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது மட்டுமல்லாமல் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள்,
திரும்ப பணத்தை வாங்கி விட்டார்களாம் . இதனால் மிகப்பெரிய கடனில் சிக்கினாராம். அஜித் அந்த நேரத்தில் தான் நம்முடைய தொழில் சினிமா தான் . அதனால் முதலில் அதில் கவனம் செலுத்துவோம் அதன் பிறகுதான் எல்லாம் என்று கூறியிருக்கிறார் ஷாலினி .
மேலும் மனைவியின் பேச்சை தட்டாத அஜித்தும் அவருடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து பல வருடங்களாக பைக் ரேஸில் இருந்தே விலகி இருந்தார். இதனால் தற்போது தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித்தும் இடம் பெற்று இருக்கிறார்.
இனிமேலாவது அவர் அவருக்கு பிடித்ததை செய்யட்டும் என்று ஷாலினி விட்டு விட்டாராம். இதனால் தான் அஜித் பல வருடங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை தொடங்கியுள்ளாராம்…