தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் தரமான கலைஞர்களில் ஒருவர்தான் மணிகண்டன். ஆரம்பத்தில் திரைப்பட எழுத்தாளராக இருந்து வந்த மணிகண்டன் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும் , எட்டு தோட்டாக்கள் , ஏலே , விக்ரம் வேதா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .
இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சில்லுகருப்பட்டி படத்தின் மூலம் தான். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து, நெற்றிக்கண், ஜெய் பீம் போன்ற படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பா வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றார் .
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த வெளியான குட் நைட், லவ்வர் போன்ற இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது . மேலும் இந்த படத்திற்கு முன்பு லட்சத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு,
வந்த மணிகண்டன் தொடர் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் . அந்த வகையில் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம் மணிகண்டன். இதைப் பார்த்த ரசிகர்கள் இவருடைய தரமான நடிப்பிற்கு ,
இரண்டு கோடி தாராளமாக கொடுக்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …