தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் சினிமாவில் அறிமுகமான குறிப்பிட காலகட்டத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறினார் நடிகர் சிவகார்த்திகேயன். இன்னும் சொல்லப்போனால் ,
நம்ம வீட்டு பிள்ளை போலவே சிவகார்த்திகேயன் இருந்து வந்தார் . ஆனால் சமீபத்தில் டி இமான் பிரச்சனையால் சிவகார்த்திகேயனின் பெயர் அப்படியே கெட்டுப்போனது. இப்படி இருக்கும் நிலையில் ரொம்ப நாட்களாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த சிவகார்த்திகேயன்,
தற்போது சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்கி இருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் அத்தியாவசிய தேவைக்காகவே சென்னை மக்கள் தவித்து வந்தனர் .
இந்த நேரத்தில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவித்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்திருந்தனர் . அந்த வகையில் சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த பணம் சரியாக போய் சேருமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…
மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.… pic.twitter.com/LieFhGwO31
— Udhay (@Udhaystalin) December 10, 2023