ஒரு காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாக இருந்து வந்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி . அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமான டிடி தொடர்ந்து காபி வித் டிடி ,அச்சம் தவிர் ,அன்புடன் டிடி ,எங்கிட்ட மோதாதே மற்றும் விஜய் அவ்ர்ட்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார் . குறிப்பாக இவர் தன்னுடைய நகைச்சுவையான ,
பேச்சாலும் , குறும்புத்தனமான உடல் மொழியாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த டிடி வெள்ளித்திரையில் வெளியான பவர் பாண்டி, சர்வம் தாள மையம் ,காபி வித் காதல் , துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ,
என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை கரம் பிடித்தார் டிடி. ஆனால் திருமணம் ஆகி 3 வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் . இந் நிலையில் விவாகரத்துக்குப் பிறகு டிடி சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்,
என்று பலரும் நினைக்கிறார்கள் . ஆனால் விவாகரத்துக்கு பிறகும் அவர் கொடுமையான வாழ்க்கையை தான் அனுபவித்து வருகிறாராம். அந்த வகையில் டிடி தொகுப்பாளி னியாக பணியாற்றும்போது பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் நின்றதால் அவருக்கு ( Rheumatoid Arthritis ) முடக்குவாதம் நோய் வந்துள்ளதாம். இதனால் இவரால் ரொம்ப நேரம்,
நிற்க முடியாதாம். சில சமயங்களில் வெளியில் போகும் போது வீல் சேர் அல்லது ஸ்டிக் பயன்படுத்தி செல்வாராம் தொகுப்பாளினி டிடி . அதனால் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படியொரு நிலைமையா என்று கூறிவருகின்றனர் …