மாரி செல்வராஜ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .
தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார் மாரி செல்வராஜ் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலுவும் , உதயநிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜை பற்றி பேசி இருந்தனர் . அதில், படப்பிடிப்பின் போது,
மாரி செல்வராஜ் அதிகம் கோபப்படுவார் என்றும், உதவி இயக்குனர்களை அடிக்கடி அடிப்பார் , கண்ணா பின்னான்னு கத்துவார் , படப்பிடிப்பே போர்க்களமாக தான் இருக்கும் என்று கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் இரண்டு படம் எடுத்ததற்கு இவ்வளவு ஆணவமா என்று கூறி வருகின்றனர்…
திரும்பவும் முதல்ல இருந்தா 👀#Mariselvaraj pic.twitter.com/j80R44yaWM
— Prakash Mahadevan (@PrakashMahadev) June 21, 2023