தற்போது தமிழ் சினிமா உலகில் கொஞ்சம் கொஞ்சமாக நயன்தாராவின் இடத்தை பிடித்து வருகிறார் நடிகர் திரிஷா . குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக 68 வயது நடிகருக்கு,
ஜோடியாக உள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவி தான் . இவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் இணைய உள்ளனர் . மேலும் சமீப காலமாக ,
சிரஞ்சீவிக்கு எந்த ஒரு படங்களும் கை கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது திரிஷா இவருடன் இணைந்துள்ளதால் இவருடைய மார்க்கெட் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது…