தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனாலேயே இவரை எல்லோருக்குமே பிடிக்கும் . அப்படித்தான் இவரை ஒரு நடிகைக்கும் பிடித்திருக்கிறது . இதனால் அந்த நடிகை விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளார் .அவர் வேறு யாருமில்லை நடிகை ஷில்பா மஞ்சுநாத் தான் .
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காளி ,ஹரிஷ் கல்யாணத்துடன் இணைந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,
பேரழகி ஐஎஸ்ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய அளவில் ,
பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லைஇப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது, எனக்கு விஜய் சேதுபதி என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு சம்பளம் கூட வேண்டாம் அவருடன் நடித்தால் மட்டும் போதும் என்று தன்னுடைய நீண்ட நாள் ஆசையை,
வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதனால் வரும் காலங்களில் கண்டிப்பாக விஜய் சேதுபதி இவருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …