April 30, 2024

கல்யாணமாகி 17 வருடங்கள் ஆகியும் குறையாத காதல் ..!! இணையத்தை கலக்கும் சூர்யா – ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா.  கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.  அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து உயிரிலே கலந்தது ,பேரழகன், காக்க காக்க ,மாயாவி, சில்லுனு ஒரு காதல் ,

போன்ற பல படங்களில் சூர்யாவும் , ஜோதிகாவும்  ஒன்றாக நடித்திருந்தனர்.  இதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் சூர்யாவும் , ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு தியா என்ற மகளும் , தேவ் என்ற மகனும் உள்ளனர் .

மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் பழையபடி சினிமாவை கலக்கிக் கொண்டு வருகிறார். இவரைத்தொடர்ந்து சூர்யாவும் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் .  இப்படி இருக்கும் நிலையில்,

சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் ஆகிய கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகியும் கூட இருவருக்கும் இடையே இருந்த காதல் அப்படியே தான் இருக்கிறது.  அதை வெளிப்படுத்தும் வகையில் சூர்யா ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *