கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி சாரப் ,விநாயகன் ,சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ,தமன்னா,யோகி பாபு , மிர்னா மேனன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான,
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இந்நிலையில் கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ஏகப் போக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு சாதனை செய்த ,
அனைத்து திரைப்படங்களின் வசூலையும் தொம்சம் செய்து வருகிறது ஜெயிலர் திரைப்படம் . அப்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாகவே 500 கோடி தான் வசூலித்திருந்தது . அதை பத்தே நாளில் தாண்டி உள்ளது ஜெயிலர் திரைப்படம். அந்த வகையில்,
தற்போது 500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த டார்கெட் பாகுபலி திரைப்படமாம் . அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் 600 இருந்து 650 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இப்படி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் ஜெயிலர் திரைப்படம் பாகுபலி படத்தின் மொத்த வசூலையும் மிஞ்சிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா என்று கொண்டாட்டத்தில் கூறி வருகின்றனர்…