9 0 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிம்ரன் தொடர்ந்து ஒன்ஸ்மோர் ,நேருக்கு நேர் ,அவள் வருவாளா ,நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
குறிப்பாக அப்போது ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு அடைமொழி இருக்கும் அப்படி இவரை ” இடுப்பழகி ” சிம்ரன் என்று தான் அழைத்து வந்தனர் . அதுவும் அப்போது இவரின் இடுப்பழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் ,
சிம்ரனின் இடுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கும் நடிகை சிம்ரனின் இடுப்பு,
மிகவும் பிடிக்கும். நான் அவரை ரொம்ப ரசித்து இருக்கிறேன். மேலும் ஒரு பெண்ணை ஒரு பெண்ணே பார்த்து ரசிக்கிறார் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை . அந்த அளவிற்கு நான் யோசித்துப் பார்க்கவும் இல்லை . கவர்ச்சி என்பது,
தவறான ஒன்று கிடையாது . கவர்ச்சி என்பது உடையிலோ , அழகிலோ இல்லை. ஒருவர் பார்க்கும்போது அவர் முகம் சுளிக்கும்படி இருந்தால் தான் அது கவர்ச்சி . எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்று கூறியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…