மாரிமுத்து ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதன் பிறகு பல வருடங்கள் கழித்து புலிவால் என்ற படத்தையும் இயக்கி இருந்தார் மாரிமுத்து . இந்த இரண்டு திரைப்படங்களும்,
ஓர் அளவுக்கு தான் வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பிறகு முழுநேர நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் மாரிமுத்து. அதன் வகையில் புலிக்குத்தி பாண்டி, களத்தில் சந்திப்போம், ருத்ர தாண்டவம், அன்பறிவு ,விக்ரம் ,கண்ணை நம்பாதே ,ஜெயிலர், இந்தியன் 2 போன்ற ,
பல திரைப்படங்களில் துணை வேடங்களிலும் ,குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து . என்ன தான் இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த,
வருடத்திலிருந்து சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் . இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் மாரிமுத்து . அப்படி இந்த சீரியலில் நடிப்பதற்காக ,
ஒரு மாதத்திற்கு 75 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம் நடிகர் மாரிமுத்து . மேலும் நடிகர் மாரி முத்து சினிமாவில் இருந்த போது கூட இவ்வளவு சம்பாரிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்த ரசிகர்கள் ஆதி குணசேகரன்னா சும்மாவா என்று கூறி வருகின்றனர்…