தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படி கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .
இப்படி இருக்கும் நிலையில் அண்ணாத்த படத்திற்குப் பிறகு ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த் . இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது . இப்படி ஒரு நிலையில் தன்னுடைய படம் வெளியாவதற்கு ,
முன்பே இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ஆனால் கடந்த நான்கு வருடங்களாக செல்ல வில்லையாம். இதனால் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று இருக்கிறார்.அப்போது,
சென்னை விமான நிலையத்தில் பல பேர் வரிசையில் நின்று கொண்டிரு ந்தார்களாம். அப்போது ரஜினிகாந்தை பார்த்ததும் காவலர்கள் நீங்கள் முன்னாடி செல்லலாம் என்று அவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர் .இதனால் மற்றவர்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது,
என்று, நீங்க எல்லோரும் ரொம்ப நேரமா நிற்பீர்கள், என்னை மன்னிச்சிடுங்க என்று பெருந்தன்மையாக கூறிவிட்டு சென்றாராம் ரஜினிகாந்த். இதனால் தான் இவரை இப்போதும் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது…