தமிழ்நாட்டை கலக்கி வரும் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவர்தான் சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் சரவணன் அருள் . ஆரம்பத்தில் தன்னுடைய கடையில் ப்ரமோஷனுக்காக விளம்பரத்தில் நடித்து வந்த இவருக்கு திடீரென்று சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்துள்ளது . அப்படி தி லெஜன்ட் என்ற படத்தை எடுத்தார் சரவணன் அருள் . பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படம் ,
மோசமான விமர்சனங்களையே பெற்றது . குறிப்பாக அண்ணாச்சிக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை என்று பலரும் கலாய்த்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அண்ணாச்சி . அந்த வகையில் இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான,
கதைக்களமாக இருக்கும் என்றும், இந்தப் படத்திற்காக டெஸ்ட் சூட் ஒன்று நடக்க உள்ளது என்றும் , அந்த டெஸ்ட் சூட் நன்றாக வந்தால் தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறியுள்ளார் . இதனால் போன படத்திற்கு இந்த படத்தில் அவருடைய நடிப்பு மெருகேறும் என்று கூறப்படுகிறது…