நதியா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் கலங்கி கொண்டு வந்த நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மந்திர புன்னகை,
உனக்காகவே வாழ்கிறேன் ,நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதன் பிறகு திருமணம் ஆனதால் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நதியா மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ,
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தன்னுடைய வயது ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நதியா. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நதியாவிடம் நீங்கள் நடித்ததிலேயே ,
சிறந்த திரைப்படம் என்றால் எந்த படத்தை சொல்வீர்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த நதியா, நான் நடித்ததிலேயே இரண்டு திரைப்படங்கள் மட்டும்தான் சிறந்த படங்கள். அதில் ஒன்று நான் அறிமுகமான பூவே பூச்சூடவா ,இரண்டாவது ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,
இதற்குக் காரணம் இந்த இரண்டு திரைப்படங்கள்தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது என்று கூறியிருந்தார் நடிகை நதியா . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப மற்ற படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லையா என்று கூறி வருகின்றனர்…