தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் . இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் ஏ ஆர் ரகுமான் தான் தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளமாகும் இசையமைப்பாளராக இருந்து வந்தார் . தற்போது அவரையே ஓரங்கட்டியுள்ளார் அனிருத் . அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம்,
இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜய் ,அஜித், சூர்யா போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அனிருத் .
அதோடு இவர் தமிழ் மொழியையும் தாண்டி பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் . அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகும் ஜவான் என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத் . ஆனால் இந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் தான் தற்போது ,
பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானே ஒரு படத்திற்கு எட்டு கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறாராம். ஆனால் ஜவான் படத்திற்காக அனிருத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது சம்பள விஷயத்தில் ஏ ஆர் ரகுமானையே மிஞ்சியுள்ளார் அனிருத் . அது மட்டுமில்லாமல் தற்போது ஜெயிலர் , ஜவான் ,லியோ, இந்தியன் 2 , விடாமுயற்சி என்று பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அனிருத்…