தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் தாறுமாறாக சம்பளத்தை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் ஒரு வில்லன் நடிகர் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் சேதுபதி தான் . ஆரம்பத்தில் சிறு சிறு கதா பத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி கடந்த 2010 ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம்,
ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படி ஹீரோவாக கலக்கி கொண்டு,
வந்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் வில்லனாகவும் நடிக்க தொடங்கினார் . அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல், விஜய் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி மற்ற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் . இப்படி பிசியான நடிகராக இருந்து வந்த,
விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்த நடிக்க உள்ள ஒரு வெப் சீரிஸ்காக 20 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளாராம் நடிகர் விஜய் சேதுபதி . அதற்காக 20 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம் .
அந்த வகையில் ஆண்டவன் கட்டளை , கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்க உள்ள வெப் சீரியஸில் நடிக்க இருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி. பிசியான நேரத்தில் கால் சீட் கொடுத்ததால் இவ்வளவு சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது…