விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல வருடங்களாக ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிக்கரமாக 6 சீசன்களை கடந்துள்ளது .
இதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது . அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். இதனால் இந்த சீசனின் யார் யாரு கலந்துக்கொள்ளப்போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக் கின்றனர் .
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 முதல் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பிரபல செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் தான் . அந்த வகையில் பிரபலமான செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த ரஞ்சித்,
அவருடைய குரலுக்காகவே ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமடைந்தார் . இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் இவருடைய குரலை தெரியாதவர்களே யாரும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சமீபத்தில் தான் அந்த செய்தி நிறுவனத்தில் ,
இருந்து விலகிய ரஞ்சித் தற்போது பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளாராம் . இதனால் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டுக்குள் வாய்ப்பேச்சில் மற்ற போட்டியாளர்களுக்கு டாப் கொடுப்பார் என்று கூறப்படுகிறது…