தற்போது தமிழ் சினிமா உலகில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களின் ஒருவராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி ,மாஸ்டர் , விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் . இதை அடுத்து தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார் .
இந்த படத்தை முடித்த கையோடு ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது எத்தனை கோடி கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாருடன் படம் பண்ண மாட்டேன் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ் .
அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கு முன்பே ரஜினிக்கு கதை சொல்லி இருந்தாராம் லோகேஷ் கனகராஜ் . ஆனால் அதை மறுத்து விட்டு தான் நெல்சன் உடன் பணி புரிந்திருந்தார் ரஜினி . ஆனால் உண்மையில் லோகேஷ் கனகராஜ் சொல்லிய கதையின் குறிப்பிட்ட பகுதியை,
நெல்சனிடம் சொல்லி ஜெயிலர் படத்தில் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். பின்னர் இந்த படம் வெளியான பிறகு அந்த குறிப்பிட்ட காட்சியை பார்த்த லோகேஷ் கனகராஜ் சரியான மன உளைச்சலில் இருக்கிறாராம். இதனால் ரஜினி படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு,
முடிவெடுத்ததாக கூறப்படுகிறது . இப்படி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய கதையை அவருடைய படத்தில் பயன்படுத்தியதால் எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் அவருடன் பணிபுரிய விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…