சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னணி நடிகை ஆகலாம் என்று சொல்வார்கள் . ஆனால் தேசிய விருது வாங்கியும் கூட ஒரு நடிகை ஐட்டம் டான்சராக இருந்து வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரித்திகா சிங் தான். கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் தன்னுடைய,
திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ரித்திகா சிங் . இப்படி வெளியான முதல் திரை ப்படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . அது மட்டுமல்லாமல் தான் நடித்த முதல் திரைப்படத்திற்கே சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் நடிகை ரித்திகா சிங் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே , விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்,
நடிகை ரித்திகா சிங் . இப்படி இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படி அதுபோன்ற நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்காமல் ஐட்டம் டான்ஸ்ராக மாறி பெயரை எடுத்துக் கொண்டார் நடிகை ரித்திகா சிங்.
அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கிங் ஆப் கோதா என்ற படத்தில் இடம் பெற்ற பாடலில் ஐட்டம் நடனம் ஆடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை ரித்திகா சிங் …