May 7, 2024

39 வது பிறந்த நாளை..!! மகன்கள் மற்றும் கணவருடன் கொண்டாடிய நயன்தாரா ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!! பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

நயன்தாரா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் திரைப்படத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி ,

சூர்யாவுடன் கஜினி ,அஜித்துடன் பில்லா ,விஜய்யுடன் வில்லு , தனுசுடன் யாரடி நீ மோகினி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை நயன்தாரா . மேலும் இவர்,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே  பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா.  தற்போது நடிகை நயன்தாரா அன்னபூரணி, டெஸ்ட் , மண்ணாங்கட்டி என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை மகன்கள் மற்றும் கணவருடன் கொண்டாடியிருக்கிறார் நடிகை நயன்தாரா . தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *