கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு வடிவேலு போகாததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வடிவேலுவை கண்டபடி திட்டி இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் வடிவேலு மட்டும் அன்று வந்திருந்தால் அவரை ஒரு வழி பண்ணி இருப்பார்கள் . மேலும் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கலாம் , அதைக்கூட வடிவேலு செய்யவில்லை .
இதனால் தான் பல பேர் வடிவேலு மீது உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவின் நண்பர் இது குறித்து கூறியதாவது, விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் வடிவேலு எப்படி அழுதார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
மேலும் நேரில் சென்றால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விடும் என்பதாலேயே அவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பில் கலந்துக்கொள்ளவில்லை , மற்றபடி வேற எந்த காரணமும் இல்லை என்று கூறியிருந்தார்…