எஸ் ஜே சூர்யா பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த எஸ் ஜே சூர்யா கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குஷி, நியூ ,அன்பே ஆருயிரே ,இசை போன்ற பல திரைப்படங்களை ,
இயக்கியிருந்தார் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. பின்னர் ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகர் ஆகவே மாறினார் எஸ் ஜே சூர்யா . அப்படி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த எஸ் ஜே சூர்யா தற்போது வில்லனாக கலக்கிக் கொண்டு வருகிறார். அதுவும் சமீபத்தில்,
இவர் வில்லனாக நடித்திருந்த மாநாடு, டான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தற்போது மார்க் ஆண்டனி ,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கேம் சேஞ்சர் என்று ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா .
இப்படி இருக்கும் நிலையில் தற்போது 55 வயதாகும் எஸ் ஜே சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . ஆனால் அது நடந்தால் தான் திருமணம் என்று முடிவெடுத்து விட்டாராம் எஸ் ஜே சூர்யா . அந்த வகையில் எப்போது ஒரு நடிகராக வெற்றி அடைகிறானோ,
அப்போதுதான் கல்யாணம் செய்வேன் என்று முடிவெடுத்து விட்டாராம் . ஆனால் இப்போது நல்ல நடிகராக கொடி கட்டி பறந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. ஆனால் இனிமேல் இவருக்கு யாராவது பெண் கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது…