தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா . தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி , விஜய் , அஜித் , சூர்யா , விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம்,
இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. இதனால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளானார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவை தொடர்ந்து இந்த நடிகையும் வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற போகிறாராம் .அவர் வேறு யாருமில்லை,
ஹிந்தி நடிகையான மலைக்கா அரோரா தான் . இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் “தக்க தைய தைய தையா” என்ற பாடலில் நடனமாடி இருப்பார் . மேலும் ஏற்கனவே திருமணமான நடிகை மலைக்கா அரோரா தற்போது தயாரிப்பாளர் போனி கபூரின்,
மகனான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறாராம். இதற்கும் இருவருக்கும் இடையே 11 வயது வித்தியாசம் உள்ளது . அப்படி இருந்தும் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்களாம் .இப்படி இருக்கும் நிலையில் மலைக்கா அரோராமற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் வாடகை தாய் மூலம் ,
ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளார்களாம் . இந்த விஷயத்தை பாலிவுட் சினிமாவின் விமர்சகரான உமைர் சந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.அவர் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …
Breaking news : #MalaikaArora & #ArjunKapoor is going to Plan their First Baby through surrogacy very soon. pic.twitter.com/hUXLmKaL8u
— Umair Sandhu (@UmairSandu) July 11, 2023