90 களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் நடிகை ஜோதிகா. இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோதிகா. பின்னர் திருமணமான பிறகு ந டிப்பதை நிறுத்திக்கொண்ட ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.இப்படி இருக்கும் நிலையில் ,
விஜய் படத்தின் வாய்ப்பை தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே வருகிறாராம் நடிகை ஜோதிகா. அந்த வகையில் விஜய்யும் , ஜோதிகாவும் இணைந்து குஷி , திருமலை போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ,
ஜோதிகா தான் முதலில் நடிக்க இருந்தாராம் . ஆனால் ஒரு நாள் மட்டும் நடித்துவிட்டு என்னால் நடிக்க முடியாது என்று கிளம்பி விட்டாராம் ஜோதிகா . இதை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தான் தளபதி 68 இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் .
இதில் அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை போடலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . ஆனால் நடிகை ஜோதிகா முடியாது என்று மறுத்து விட்டாராம் . இதனால் வேறொரு நடிகையை ந டிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து இரண்டு முறை விஜய் யின் படங்களை ஜோதிகா நிராகரித்து வந்ததால் விஜய்க்கும் இவருக்கும் ஏதாவது பிரச்சனையா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. அப்படி இல்லையென்றால் சூர்யாவுக்காக ஜோதிகா இப்படி செய்கிறாரா என்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது…