தற்போது தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன் . இன்று தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாவீரன். இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ,
வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் , அதிதி ஷங்கர் ,மிஷ்கின், சரிதா ,யோகி பாபு, சுனில் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 75 கோடிக்கு மேல் ,
வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதெல்லாம் பொய்யான தகவல் என்றும் சிவகார்த்திகேயன் நாடகமாடுகிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் தயாரிப்பாளரே சிவகார்த்திகேயனின் பினாமி தானாம்.
இதனால் இந்த திரைப்படமே சிவகார்த்திகேயனுடையது தானாம் . அதனால் தான் இந்த திரைப்படம் உண்மையாக வசூலித்ததை விட அதிகமான தொகையை கூறினால் அடுத்த படத்தின் சம்பளம் இன்னும் உயரும் என்று சிவகார்த்திகேயன் இப்படி செய்ததாக,
கூறப்படுகிறது . மேலும் ஏற்கனவே ஒரு படத்திற்கு 30 லிருந்து 35 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் சம்பாதிப்பதற்கு இதுபோன்று செய்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்கிங்கை ஏற்படுத்தி உள்ளது…