சரண்யா பொன்வண்ணன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1987 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை சரண்யா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வந்த சரண்யா கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகரும் , இயக்குனருமான பொன்வண்ணனை,
திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . மேலும் திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்த சரண்யா பொன்வண்ணன் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவை ,
கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக நடித்த பிரபலமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்,
நடிகர் சரண்யா பொன்வண்ணன். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 28 வது திருமண நாளை படப்பிடிப்பிலேயே கொண்டாடிஇருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…