தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நட்சத்திரமாக கலக்கி கொண்டு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் . இதனாலேயே இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் இப்போதும் கூட ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் . ஆனால் அந்த காலத்தில்,
ரஜினியின் நிறத்தைக் காட்டி நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை நதியா தான் . கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நதியா.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வந்தார். அப்படி இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினியுடன் நடிப்பதற்கு பலமுறை வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவர் கருப்பாக இருந்த ஒரே காரணத்தால் அவருடன் நடிக்க மாட்டேன் என்று,
கூறிவிட்டாராம் நடிகை நதியா. இதன்பிறகு அவருடன் நடித்தால் உங்களின் சினிமா வாழ்க்கை உயரும் என்று பலரும் நதியாவிடம் கூறி இருக்கின்றனர். இதன் பிறகு இறங்கி வந்த நடிகை நதியா ரஜினி என்னை தொட்டு நடிக்க கூடாது , எங்களுக்குள் ரொமான்ஸ் காட்சிகள்,
இருக்கக் கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டு தான் ராஜாதி ராஜா படத்தில் கதாநாயகியாக நடித்தாராம் . ஆனால் அதன் பிறகு ரஜினியுடன் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகை நதியா…