தற்போது நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலில் களம் இறங்குவதற்காக தீயாக வேலை செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இதனால் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க போவதாகவும் கூறியிருந்தார் . இதை பார்த்த பலரும் விஜய்க்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை அரசியலில் தோற்று விட்டால் சினிமா வாழ்க்கையும் பாதிக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் சினிமா, அரசியல் கைவிட்டாலும்,
தொழில் கைவிடாது என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறாராம் நடிகர் விஜய். அந்த வகையில் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் விஜய் ரகசியமாக பல தொழில்களை செய்து வருகிறாராம். அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக முதலீடு செய்து வருகிறாராம்.அது மட்டுமல்லாமல் அப்பார்ட்மெண்ட் மற்றும் ,
திருமண மண்டபங்களை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளாராம். அதோடு சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறாராம் . இப்படி இத்தனை தொழிலை கைவசம் வைத்துள்ளதால் நடிகர் விஜய்க்கு எந்த காலத்திலும் பொருளாதார நெருக்கடி வரவே வராதாம் . இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளாராம்…