சுனைனா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சுனைனா கடந்த 2008 ஆம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து மாசில்லா மணி, யாது மகி ,வம்சம், திருத்தணி ,நீர் பறவை ,சமர் ,தெறி ,
கவலை வேண்டாம் , தொண்டன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சுனைனா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக சமீப காலமாக,
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சுனைனா . ஆனால் இவர் ஒரு திறமையான நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இப்படி இருக்கும் நிலையில் ,
நடிகை சுனைனா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம் . அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . எந்த காரணத்திற்காக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. இருந்தாலும் தன்னுடைய ,
புகைப்படத்தை பகிர்ந்து கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் திரும்பி வந்து விடுவேன் என்று பதிவிட்டுள்ளார் நடிகை சுனைனா. இதை பார்த்த ரசிகர்கள் சுனைனா சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூறி வருகின்றனர்…
View this post on Instagram