தற்போது தமிழ் சினிமா உலகில் நடிகர் தனுஷுக்கு இருக்கும் வரவேற்பு எந்த நடிகருக்கும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நடிகர் தனுஷ் தான் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி ,ஆங்கிலம் என்று பல மொழி படங்களிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் . அதோடு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ,இயக்குனர், பாடகர், பாடலாசிரியர்,
என்று பன்முகம் கொண்டவராகவும் இருந்து வருகிறார் நடிகர் தனுஷ் . இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். திருமணமான இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் கடந்த வருடம் ஐஸ்வர்யாவும்,
தனுஷும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். மேலும் விவாகரத்துக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷுக்கு சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நூறு கோடிக்கு மேல் ,
வசூல் செய்து சாதனை படைத்தது . இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நீண்ட தாடியுடன் நடித்திருந்தார் தனுஷ் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து மொட்டை அடித்து வேண்டுதல்,
வைத்துள்ளாராம் நடிகர் தனுஷ் . அது என்னவென்றால் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படத்தைப் போல கேப்டன் மில்லர் திரைப்படமும் நல்ல வெற்றி படமாக அமைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்ததாக கூறப்படுகிறது . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…