மாதவன் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதா பாத்திரங்களின் நடித்து வந்த மாதவன் கடந்த 2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாதவன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
மின்னலே ,டும்டும் டும் ,கன்னத்தில் முத்தமிட்டால்,ரன் ,அன்பே சிவம், பிரியமான தோழி ,ஜே ஜே என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மாதவன். அதுவும் அப்போது இருந்த பல பெண்கள் மாதவன் போன்று தான் ,
எனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று அவர் மீது பித்து பிடித்து போய் இருந்து வந்தனர். இதற்கும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் அப்போது மாதவனின் வீட்டுக்கு மூட்டை மூட்டையாக காதல் கடிதங்கள் வருமாம் . அதையெல்லாம் ,
எடுத்து வர முடியவில்லை என்று போஸ்ட்மேன் சொன்னதும் தன்னுடைய உதவியாளரை போய் அந்த கடிதத்தை எல்லாம் எடுத்து வர சொன்னாராம். அப்படி அந்தக் கடிதத்தில் காதல் கடிதங்கள் ,போட்டோ கேட்டு கடிதம் ,ஆட்டோகிராப் கேட்டு கடிதம் என்று மலை போல் குவிந்திருந்ததாம்.
அந்த நேரத்தில் பிஸியாக இருந்த மாதவனால் எல்லா கடிதத்தையும் படிக்க முடியாது என்பதால் அந்த கடிதத்தை படித்து அதற்கு பதில் எழுதுவதற்கு என்று தனியாக ஒருவரை நியமித்து வைத்திருந்தாராம் . அந்த அளவிற்கு தன்னுடைய ரசிகர்களை நேசித்தாராம் நடிகர் மாதவன்…