தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் பாரதிராஜா. இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல நடிகர் நடிகைகளை இவர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார் .
அப்படி இவர் அறிமுகப்படுத்தி வைத்தவர்களில் ஒருவர் தான் நடிகை ரஞ்சிதா . கடந்த 1992 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரஞ்சிதா . இந்தப் படத்தில் கார்த்திக், ரஞ்சிதா ,பாண்டியன் ,ஜனகராஜ் போன்ற ,
பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில் வாத்து மேய்க்கும் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் நடிகை ரஞ்சிதா . ஆனால் இந்த படத்தில் ரஞ்சிதாவை ஜாக்கெட் போடாமல் வெறும் புடவையை கட்டிக்கொண்டு நடிக்க சொன்னாராம் இயக்குனர் பாரதிராஜா .இதை கேட்டதும் ,
ஜாக்கெட் இல்லாமல் எப்படி நடிப்பது என்று கதறி அழுதாராம் நடிகை ரஞ்சிதா . அந்த நேரத்தில் தான் பாரதிராஜா அறிமுகம் செய்துவைத்த நடிகைகளை பற்றி அவரிடம் கூறியுள்ளனர். இதனால் தான் அந்த படத்தில் அப்படி நடிப்பதற்கு சமதித்தாராம் ரஞ்சிதா. இதன் பிறகு தான் இவர் தமிழ் சினிமாவில்,
ஒரு ரவுண்டு வந்தார் . இப்படி ஆரம்பத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று கூறிய ரஞ்சிதா ஒரு கட்டத்தில் கவர்ச்சியாகவும் நடித்து வந்தார் . ஆனால் தற்போது சினிமாவை விட்டுவிட்டு நித்தியானந்தாவின் தனித்தீவில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை ரஞ்சிதா…