கரண் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த கரண் நம்மவர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே ,நேருக்கு நேர் ,கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல திரைப்படங்களில்,
நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவருடைய வில்லத்தனமான நடிப்பிற்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . ஆனால் இதன் பிறகு அவருடைய மேனேஜரை நம்பி தன்னுடைய சினிமா வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாராம் நடிகர் கரண்.
அந்த மேனேஜர் வேற யாரும் இல்லை சென்னை 600028 படத்தில் நடித்த நடிகர் நிதின் சத்யாவின் அம்மா லட்சுமி தானாம். இவரால்தான் நடிகர் கரணின் சினிமா வாழ்க்கையே தொலைந்து போனதாம். இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…