நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . மேலும் இவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதிலிருந்து இவருக்கு விமர்சனங்கள் தான் அதிகம் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இவரால் தமிழ்நாட்டை ஆள முடியுமா.? அரசியல் என்பது விளையாட்டா .? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் ,
அடுத்தடுத்த தன்னுடைய அரசியல் அஸ்திவாரத்தை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் திடீரென தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அனைவரும் இப்படி ஒரு உறுதிமொழி ஏற்று இருக்கிறார்களாம் . அந்த வகையில் அந்த உறுதிமொழி அறிக்கையில்,
நமது நாட்டின் விடுதலைக்காகவும் ,மக்களின் உரிமைக்காகவும் ,தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன் என்றும் ,நம்முடைய அன்னை மொழியான தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த தியாகிகளின்,
இலக்கையும் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், சாதி, மதம் ,பாலினம் ,பிறந்த இடம் இவை ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை கலைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு ,சம உரிமை கிடைக்க,
பாடுபடுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தற்போது உறுதிமொழி ஏற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது …