தமிழ் திரை உலகில் ஓர் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வருபவர் வைகை புயல் வடிவேலு அவர்கள். என்னதான் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் தன்னுடைய ஆணவத்தால் பல துணை நடிகர்களின் வாழ்க்கையையும் கெடுத்திருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் வளர்ந்து வரும் காமெடி நடிகரை பணம் கொடுத்து அமுக்கி இருக்கிறார் வடிவேலு.
அவர் வேறு யாருமில்லை நடிகர் பெஞ்சமின் தான். கடந்த 2000 ஆண்டு வெளியான வெற்றிக்கொடிக்கட்டு என்ற படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார் பெஞ்சமின். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது ஆட்டோகிராப் மற்றும்,
திருப்பாச்சி போன்ற படங்களின் மூலம் தான். இந்த படங்களுக்குப் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்ததாம் . இன்னும் சொல்லப் போனால் தயாரிப்பாளர்களால் அட்வான்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினாராம் நடிகர் பெஞ்சமின் .
ஆனால் ஒரு வருடம் ஆகியும் யாருமே படப்பிடிப்பிற்கு கூப்பிடவில்லையாம் . இதன் பிறகு தான் தெரிந்தது இதெல்லாம் வடிவேலு பார்த்த வேலை என்று . இப்படி வளர வேண்டிய நடிகரை வடிவேலு அமுக்கியதால் இன்று வரை பெஞ்சமின் சினிமாவில் மேலே வர முடியாமல் போராடி,
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்த ரசிகர்கள் வடிவேலுக்கு இவ்வளவு கேவலமான புத்தியா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்…