தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 , ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்களை இயக்கிக்கொண்டு வருகிறார் . இப்படி பிஸியான இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய மகள்களால் தூக்கத்தையே,
தொலைத்து விட்டாராம் இயக்குனர் ஷங்கர் . அந்த வகையில் இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கிரிக்கெட் வீரரான ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்தார் ஷங்கர் . ஆனால் திருமணமான பிறகு தான் ரோஹித் மீது ,
பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது . இதனால் அவருடன் வாழ முடியாது என்று ஷங்கரின் வீட்டிற்கே வந்து விட்டாராம் ஐஸ்வர்யா . மூத்த மகள் தான் இப்படி என்று பார்த்தால் இரண்டாவது மகளும் ஷங்கரின் பேச்சை கேட்கவில்லை யாம் . அந்த வகையில் இரண்டாவது மகளான ,
அதிதியை டாக்டருக்கு படிக்க வைத்திருந்தாராம் ஷங்கர் . ஆனால் நடிகையாக வேண்டும் என்று விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாராம் அதிதி ஷங்கர் . குறிப்பாக ஆசைக்கு ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்று கூறிய அதிதி ஷங்கர் தற்போது பல திரைப்படங்களில்,
கமிட்டாகி உள்ளாராம். இதனால் மகள்களை நினைத்து நினைத்து நிம்மதி இல்லாமல் கவலையில் இருந்து வருகிறாராம் இயக்குனர் ஷங்கர் . இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …