தமிழ் திரையுலகை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்கள் தான் ரஜினி, விஜய் ,அஜித். இதில் உள்ள மூன்று பேருக்குமே தற்போது மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது . இன்னும் சொல்ல போனால் இவர்கள் தான் பல வருடமாக தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து வருகிறார்கள். இதனால் பண்டிகை நாட்களில் இவர்கள் மூன்று பேரில் யாராவது ஒருவரின் திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் .
ஆனால் இந்த தீபாவளிக்கு இவர்களுடைய திரைப்படங்கள் எதுவுமே வெளியாகவில்லை . மேலும் என்னதான் சினிமாவில் இவர்கள் மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் மூன்று பேருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் தான் இருந்து வருகின்றனர்.
ஆனால் இது தெரியாமல் ரசிகர்கள் பலரும் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் தலைவர் ,தல, தளபதி மூன்று பேரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இது ராஜேஷ்குமார் என்பவரால் ,
உருவாக்கப்பட்ட ஏ ஐ புகைப்படங்கள் ஆகும் . இதைப் பார்த்த ரசிகர்கள் யாருயா அந்த எடிட்டர் , சூப்பரா பண்ணிருக்காரு என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…