டி ராஜேந்தர் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் , இசையமைப்பாளராகவும் அறிமுகமான டி ராஜேந்தர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரயில் பயணங்களில் ,
உயிர் உள்ளவரை உஷா ,தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் . குறிப்பாக தன்னுடைய அடுக்குமொழி வசனத்திற்காகவே ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் டி ராஜேந்தர். இருந்தாலும் அப்போதிலிருந்து,
இப்போது வரை இவரிடம் மாறாதது தாடி மட்டும் தான் . இப்படி இருக்கும் நிலையில் டி ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் கதை தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பே டி ராஜேந்தர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அவருடைய பெயரும் ,
உஷா தானாம் . அப்படி டி ராஜேந்தர் இருந்த தெருவில் தான் அந்த ப் பெண்ணும் இருந்தாராம். ஆனால் இவர்கள் இருவரின் காதலையும் அவர்களுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை யாம். அதனால் இருவரும் பிரிந்து விட்டார்களாம். அதனால் அன்று வளர்த்த தாடியை இன்று வரை ,
டி ராஜேந்தர் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது . இதன் பிறகு உஷா என்ற பெயரில் உள்ளவரையே திருமணம் செய்து கொண்டாராம் டி ராஜேந்தர். இந்த விஷயத்தை டி ராஜேந்திரன் நண்பரும் நடிகருமான தியாகு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…