தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமலுக்கு பிறகு விஜய் அஜித்துக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தது . ஆரம்பத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வந்த நிலையில் பின்னர் இருவரும் தங்களுக்குரிய பாணியில் கதை தேர்வு செய்து தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டனர். என்னதான் சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் அஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்களாகவே,
இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளாராம் . அது என்னவென்றால் , தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்து வரும் விஜய் இந்தப் படத்தை முடித்த கையோடு,
சினிமாவுக்கு டாட்டா காட்டுகிறாராம். காரணம் விஜய் அரசியலில் களமிறங்குவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனால் அடுத்த இரண்டு வருடத்தை அரசியலுக்காக செலவிட உள்ளாராம் நடிகர் விஜய் . இந்த காரணத்தால் இன்னும் இரண்டு வருடத்திற்கு படம் நடிக்க,
வாய்ப்பே கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கு இனி யாரும் போட்டி இல்லை என்பதால் இனி வரும் காலம் அஜித்தின் காலம் என்று கூறப்படுகிறது . அது மட்டுமல்லாமல் தற்போது விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் ,வெற்றிமாறன் ,
சுதா கொங்கரா போன்ற பல இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . என்னதான் இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், விஜய் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் தான் இருந்து வருகின்றனர்…