ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். இதன் பிறகு நாச்சியார் புரம் ,நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 ,இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் ரச்சிதா .
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா . ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர் .இதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைவார்கள் என்று நினைத்தால் அவருடைய கணவர் மீது,
போலி புகார் ஒன்றை கொடுத்து விவாகரத்தை உறுதி செய்து விட்டார் ரச்சிதா . இந்நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ரச்சிதா தன்னுடைய கழுத்துக்கு கீழ் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் டாட்டூ போட வேற இடமே கிடைக்கலையா என்று கூறி வருகின்றனர்…