May 7, 2024

செயற்கை சுவாசம் ..!! நம்ம கேப்டனுக்கு என்ன ஆச்சு ..?? மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை ..!! வெளிவந்த தகவல் ..!!

விஜயகாந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . சினிமா மீது இருந்த ஆர்வத்தில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்கு பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

இதன் பிறகுதான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடிக்கட்டி பறந்து வந்தார் விஜயகாந்த் . மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த விஜயகாந்த் அரசியலிலும்,

ஒரு கை பார்த்தார்.  ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் நடிகர் விஜயகாந்த் . அப்படி இருந்தும் அவர் சீக்கிரம் குணமடைந்து ரசிகர்களை பார்க்க வருவாரா என்று இப்போதும் பலரும் ஏங்கிக்கொண்டு இருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார் என்று தகவல் வெளியானது . இந்நிலையில் மூன்றாவது நாளாக விஜயகாந்துக்கு சிகிச்சை நடந்து வருகிறதாம் . குறிப்பாக விஜயகாந்துக்கு சளி அதிகமாக உள்ளதால்,

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இதனால் கேப்டன் விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *