விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் சீரியல் சரவணன் மீனாட்சி . இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர்கள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா சந்திரன் . இவர்கள் இருவரும் இந்த சீரியலில் கடைசியாக திருமணம் செய்வது போல காட்சி அமைந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடிக்கும் போதே ,
காதலித்து வந்துள்ளனர். இதன் பிறகு இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்திற்கு பிறகு சீரியல் பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் ஸ்ரீஜா . ஆனால் மிச்சி செந்தில் தற்போதும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார் . மேலும் திருமணம் இவர்களுக்கு ,
எட்டு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது . தற்போது குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்சரவணன் மீனாட்சி ஜோடி. இதோ அந்த புகைப்படம் …